தமிழகம்

தமிழகம்

அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்வு, கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்துவரும் அந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: "கழகப் பொதுச் செயலாளர் என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற கழகப் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பெரும்பான்மை முடிவின்படி, விதி எண். 20அ-வின்படி கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண். 20அ பிரிவு-7ன்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலையச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள்...
தமிழகம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு மீது பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தலையிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனையடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பிறகே, அதிமுக பொதுக்குழு நடக்குமா இல்லையா என்பது தெரியவரும். கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 6) நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடுகையில், நிர்வாகிகளின் ஆதரவை பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு...
தமிழகம்

இசை பொக்கிஷம் இளையராஜா..மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு..முதல்வர் வாழ்த்து

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் தனக்கென தனக்கென தனி இசை ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா. தனது முதல் திரைப்படத்திலேயே "அடி ராக்காயி...மூக்காயி..குப்பாயி... என்ற பாடலில் குழு பெண்களின் கோரஸை வைத்து இசை கோலம் போட்டவர் இளையராஜா. இசைப்பிரியர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி. அவருக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை...உருக்கமாக நன்றி சொன்ன இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பி கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில்...
தமிழகம்

கோவையை சேர்ந்த பைக் ரைடர் டிடிஎஃப் வாசன் மீது சென்னை காவல்துறையில் புகார்

கோவையைச் சேர்ந்த டி.டி.எஃப் வாசன் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து, அவற்றை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது யூடியூப் சேனலை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், டிடிஎஃப் வாசனை போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதனிடையே, சூப்பர் பைக்கில் மணிக்கு 247 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற வீடியோவை அவர் தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இளைஞர்களுக்கு தவறான முன்உதாரணமாக டிடிஎஃப் செயல்படுவதாக சென்னை காவல்துறை சமூகவலைதள பக்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த பகுதி சென்னை காவல்துறைக்கு உட்பட்டது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சென்னை காவல்துறை,...
தமிழகம்

இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு

காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் லீனா மணிமேகலை. அவர் மீது டெல்லி காவல்துறையின் நுண்ணறிவு மற்றும் ஸ்ட்ராடஜிக் ஆப்பரேஷன்ஸ் பிரிவினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். லீனாவின் ட்விட்டர் பகிர்வு மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்கள் இடையே வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லீனாவின் ட்விட்டர் பதிவு குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "லீனாவின் கருத்து மதம், இனம் சார்ந்த பல்வேறு குழுக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்தப் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக சில பகுதிகளில் மத ரீதியிலான பிரச்சினைகளால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற பதிவுகள் ஆபத்தானது" என்று கூறியுள்ளார். லீனா மீது பாஜக தலைவர் சிவம் சப்ரா போலீஸில் புகார் கொடுத்திருந்தார்....
தமிழகம்

பினாமி பெயரில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: வருமானவரித் துறை நடவடிக்கை

பினாமி பெயரில் வாங்கப்பட்ட சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கியது. சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தியாகராயநகர், பத்மநாபா தெருவில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் உள்ள சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். பின்னர் இரண்டாவது கட்டமாக, சசிகலா தரப்பினர் 2003-2005ஆம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கினர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர்,...
தமிழகம்

ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி குண்டார் சக்திவேல். 37 வயதான இவர்மீது கொலை,கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் தலையை வெட்டி, கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக 2021ல் கைதாகி சிறைக்கு சென்றார். பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை மத்திய சிறையில் இருந்து சோழவந்தான் வழியாக தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். மேலக்கால் அரசு பள்ளி அருகே வந்தபோது குண்டார் சக்திவேலை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். சுதாரிப்பதற்குள் எல்லாம் முடிந்து போனது. மர்ம நபர்கள் கொண்டு வந்திருந்த பயங்கர ஆயுதங்களால் குண்டார் சக்திவேலை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். அதில்...
தமிழகம்

“தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம்” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்த பல்வேறு மாவட்டங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவெடுத்தது. 2013 , 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும் 5154 ஆசிரியர் பணியிடங்கள், 10,000 தொகுப்பு புதிய...
தமிழகம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ' கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் எனக்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை...
தமிழகம்

தமிழக மக்களே உஷார்.. உடனே App- ஐ டெலிட் செய்யுங்க… காவல்துறை திடீர் எச்சரிக்கை

சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதனைப்போலவே ஆன்லைன் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் செயலிகளில் பொதுமக்கள் யாரும் கடன் பெற வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ...
1 423 424 425 426 427 499
Page 425 of 499

Right Click & View Source is disabled.

error: Content is protected !!