தமிழகம்

தமிழகம்

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழாவில் முதல்வர் Dr. அல்லி வரவேற்புரை கூறினார். கல்லூரி முதுநிலை முதல்வர் Dr.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.  ஹெக்ஸவர் டெக்னாலாஜி முதன்மை அலுவலர் ராம் சிங்கம் பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  பென்குயின் முதன்மை செயல் அலுவலர் அன்பு கனி ஆகியோர் கலந்துகொண்டனர். ராம்சிங்கம் பள்ளி மாணவர்களிடம் கூறுகையில் கடின உழைப்பு மட்டுமே வெற்றுக்கான வழி கிடைக்கும். உங்களின் உழைப்போடு நின்றிடாமல் மேலும் வெற்றியை சாதனையாக்க வாழ்த்துக்கள்.  கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி சந்தோசப்படுங்கள்.  உங்களின் வெற்றிக்கு ஹெக்ஸவர் டெக்னாலாஜி துணையாக இருக்கும் என கூறினார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தெற்குதரவையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம் ஒன்றியம் தெற்குத்தரவை கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சிறந்த கால் நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி சாத்தையா பரிசு, சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள், செந்தமிழன், சாரதா, கால்நடை ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பஞ்சவர்ணம் அடங்கிய குழு கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கினர்.  இம்முகாமில் 121 பயனாளிகளின் 190 மாடுகள், 385 வெள்ளாடுகள், 512 செம்மறி ஆடுகள், 110 கோழிகள் 6 நாய்கள் பயன் பெற்றன. செய்தியாளர்: காமேஷ் பாரதி,...
தமிழகம்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 34 வது பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் 34 வது பட்டமளிப்பு விழா நடந்தது. முஹமது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமீது இப்ராஹிம் தலைமை வகித்தார். அறக்கட்டளை இயக்குநர். எஸ்.எம்.ஏ.ஜெ.ஹபீப் முஹமது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் இரா. செந்தில்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ஜான் டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: நம் வாழ்வில் வெற்றி, தோல்வி என இரண்டும் மாறி மாறி வரும். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் முயன்று வென்று சாதனை படைக்க மாணவர்களாகிய நீங்கள் உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். அண்ணா பல்கலை அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த மாணவர் 5 பேர், இளநிலை பொறியியல் பட்டதாரிகள் 910 பேர், முதுநிலை பொறியியல் பட்டதாரிகள்...
தமிழகம்

மங்களூரு குண்டுவெடிப்பு மதுரையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ,முக்கிய மூளையாக செயல்பட்டதாக, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்(வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர்-நண்பர்களின் வீடுகளில், அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ,அங்கு ஒரு டைரி சிக்கியது.  அதில் பயங்கரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் மதுரையில் தங்கியதாக கூறப்பட்டதாக சந்தேகிக்கும் பகுதிகளான மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பல்வேறு...
தமிழகம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, முகாம்களின் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், வயது திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை கோருதல், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் ஆதார் எண்ணை சுயவிருப்பத்துடன் இணைத்தல், தொடர்பாக வரப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை, படிவங்கள் உரிய வழிமுறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்டைவைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, 01.01.2023ஆம் தேதியினை தகுதிநாளாகக் கொண்டு, அதாவது 01.01.2005-க்கு முன்னர்...
தமிழகம்

பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழங்கள், பிரட், பிஸ்கட், போன்றவை வழங்கினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள்uuh இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ந் தேதி இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கட்சியின் முன்னாள் தொகுதி தலைவரும் நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவருமாகிய சங்கிலி பாண்டியன் தலைமையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நோயாளிகளை சந்தித்து பழங்கள், பிரட், பிஸ்கட், போன்றவைகளை வழங்கினர். இந்நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணியின் தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார், வீரமணி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இளைஞர் அணி பொறுப்பாளர் முத்துப்பாண்டி, நிலக்கோட்டை பேரூராட்சி பொறுப்பாளர் சங்கிலி பாண்டியன் மற்றும் கருப்பையா, யோகேஸ்வரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி பொருட்கள் வழங்கிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரையும்...
தமிழகம்

17வது வார்டு வாக்காளர் சிறப்பு முகாம் ஓட்டு சேர்த்தல் நீக்குதல் ஆகியபணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

தேனி மாவட்டம். பெரியகுளம்நகராட்சிக்கு உட்பட்ட16 மற்றும் 17வது வார்டு வாக்காளர் சிறப்பு முகாம் ஓட்டு சேர்த்தல் நீக்குதல் ஆகியபணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னாள்நகர துணைச் செயலாளர்.அப்பாஸ் கான்.SV. மணி.17வது கவுன்சிலர். ஆட்டோ சித்திக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

வாக்குச்சாவடி எண் 122 ல் வாக்காளர் பெயர் சேர்த்தல்

தமிழக அரசின் உத்திரவின் படி தேனி வடக்கு மாவட்டம் ,பெரியகுளம் தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி எண் 122 ல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நிகழ்வில் தென்கரை பேரூர் செயலாளர் ப.பாலமுருகன் , 2 வது வார்டு செயலாளர் மு.தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

காட்பாடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொன்விழா ஆண்டு விழா

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பொன்விழா ஆண்டு முன்னிட்டு சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. வேலூர் மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொன்விழா முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வம், தலைவர் கருணாநிதி, பொருளாளர் சக்திவேல், இணை செயலாளர்கள் ரவி, சங்கர், பத்பநாபன், துணைத்தலைவர் மதன், வேலூர் மாவட்ட தலைவர் குமாரவேல், செயலாளர் நரேந்திரன், பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிர்வாகக் செயற்குழு உறுப்பினர் ராமன் நன்றி கூறினார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்  ...
தமிழகம்

வேலூரில் நாளை 14 ஆயிரம்பேர் காவலர்களுக்கு எழுத்து தேர்வு, 1200 போலீசார் பாதுகாப்பு ஈடுப்படவுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15 தேர்வு மையங்களில் ஆண்கள் 12799 பேரும், பெண்கள் 2192 பேர் உள்ளிட்ட 14,991 பேர் காவலர் எழுத்து தேர்வு எழுத உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை கூட்டம் வேலூர் விஜடி அரங்கில் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 412 413 414 415 416 545
Page 414 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!