மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழாவில் முதல்வர் Dr. அல்லி வரவேற்புரை கூறினார். கல்லூரி முதுநிலை முதல்வர் Dr.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். ஹெக்ஸவர் டெக்னாலாஜி முதன்மை அலுவலர் ராம் சிங்கம் பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பென்குயின் முதன்மை செயல் அலுவலர் அன்பு கனி ஆகியோர் கலந்துகொண்டனர். ராம்சிங்கம் பள்ளி மாணவர்களிடம் கூறுகையில் கடின உழைப்பு மட்டுமே வெற்றுக்கான வழி கிடைக்கும். உங்களின் உழைப்போடு நின்றிடாமல் மேலும் வெற்றியை சாதனையாக்க வாழ்த்துக்கள். கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி சந்தோசப்படுங்கள். உங்களின் வெற்றிக்கு ஹெக்ஸவர் டெக்னாலாஜி துணையாக இருக்கும் என கூறினார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
