தமிழகம்

தமிழகம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. அவசர மருத்துவ தேவைகள், பால், மருந்து விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. தமிழகத்தில் இன்று முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்முக்கிய செய்திகள்

வெற்றியை பிரதமர் கைகளில் ஒப்படைப்பேன்: குஷ்பு

''தேர்தலில், மிக பெரிய வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கைகளில் ஒப்படைப்பேன்,'' என, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க, வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.
தமிழகம்

தலைவர்களின் சொத்து மதிப்பு

அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது தலைவர்கள் தங்களது சொத்து மதிப்பையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகம்

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை: பிரேமலதா

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழகம்முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்

'தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,'' என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.
தமிழகம்முக்கிய செய்திகள்

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம்முக்கிய செய்திகள்

இயற்கை பேரிடர்: தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி நிதி

தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.286,91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகம்முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வதைத்து வருகிறது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகள், டீசல் ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுகள். கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை உயர்வு மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும், விலைவாசி கடுமையாக ஏறும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும், இந்தியச் சந்தைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு...
தமிழகம்

செல்லும் இடமெல்லாம் வரவேற்பு: கமல்

கோவை: பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற எங்களுக்காக விளம்பரத்தில் பொது ஜன தொடர்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தை மக்கள் பணியிலும் காட்டினால் நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்....
1 408 409 410
Page 410 of 410

Right Click & View Source is disabled.

error: Content is protected !!