தேனிப்பகுதிகளில் மருவூர் சின்னவர் தலைமையில் சக்திமாலை அணிவிப்பு, உற்சாக வரவேற்பு
தேனி மாவட்டம் கூடலூர், அனுமந்தன்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட மாவட்ட கிராமப் பகுதிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பாக அந்தந்த பகுதி வாழ் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அதிதீவிர பக்தர்களுக்கு சக்திமாலை அணிவிக்கும் நிகழ்வானது மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் மருவூர் சின்னவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக மருவூர் சின்னவருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வண்ணப்பூக்கள் தூவி மரியாதை செலுத்தி வரவேற்று சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மருவூர் சின்னவரிடம் வேண்டி கேட்டுக் கொண்டதற்கிணங்க பக்தர்களின் வீடுகளுக்கும் சென்று ஆசி வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆண், பெண்,இளைஞர்கள் எனவாக தேனி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆதிபராசக்தியின் தொண்டர்களான சக்திகள் மாலை அணிந்து விரதம் இருந்து அம்மனை தரிசிக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...








