குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் லஞ்சம் – நடவடிக்கை எடுக்குமா கேரளா அரசு? – காயல் அப்பாஸ்
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்திலிருந்து செல்லும் டூரிஸ்ட் வாகனங்களுக்கு கேரளா எல்லையான குமுளி - வாழையார் RTO செக் போஸ்ட்களில் தமிழக வாகனங்கள் கேரளா உள்ளே செல்வதற்கு வாகன ஒட்டிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். கேரளா RTO செக் போஸ்ட்களில் உள்ள அதிகாரிகள் கேட்கும் பணத்தை தமிழக வாகன ஒட்டிகள் தர மறுத்தால் வாகங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று மணி கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர். இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மற்றும் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களும் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே கேரளா எல்லை பகுதியான குமுளி - வாழையார் RTO செக் போஸ்ட்களில் கேரளா லஞ்சம் ஓழிப்பு...







