திருப்பதி-திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு
திருப்பதி - திருமலை ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்துவந்த பிரமோற்சவத்தின் நிறைவ நாளான நேற்று வராகசுவாமி கோயில் எதிரே மலையப்பசுவாமி மற்றும் தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தன. கோயில் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்கள். தீர்த்தவாரிக்கு பின்னர் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி...