தமிழகம்

நெல்லையில் தொடர்ந்து நடைபெற்று வரும் 6வது பொருநை புத்தகத் திருவிழா

48views
நெல்லை மாவட்டத்தில் வஉசி மைதானத்தில் கடந்த மாதம் 25ந் தேதி முதல் மார்ச் 7 ந் தேதி வரை 6வது பொருநை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
புத்தகத் திருவிழாவில் 127 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவகங்கள், சுய உதவிக் குழு சார்பில் இயற்கை பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை அரங்கம் உள்ளது.
மாவட்டத்தில் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரகணக்கில் மக்கள் பார்வையிட்டு புத்தகங்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
வ.உ.சி மைதானம் உள் விளையாட்டு அரங்கம் எண் 19ல் பன்மை வெளி பதிப்பகம் சார்பில் கி.வெங்கட்ராமன் எழுதிய “சூழலியல் அரசியல் பொருளியல்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் காமராஜ் வெளியிட முதல் நூலை நெல்லை மாவட்ட இளைஞர் நீதிமன்ற குழுமத்தின் உறுப்பினர் ஆரோக்கிய மேரி பெற்றுக் கொண்டார். உடன் தமிழ் தேசிய பேரியக்கம் பொருளாளர் அ.ஆனந்தன், பல் சமய பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!