தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு, குலுக்கல் முறையில் பரிசுகள்

43views
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் பள்ளி வளாகத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி துவங்கிய புத்தகக் கண்காட்சி, வரும் 27ம் தேதி (ஞாயிறு கிழமை) வரை நடைபெறுகிறது. புத்தகங்களை விரும்பி வாங்கும் புத்தகப் பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று முதல், கண்காட்சியின் கடைசி நாள் வரை தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புத்தகக் கண்காட்சியில் 200 ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வங்குபவர்களுக்கு ரசீதுகள் வழங்கப்படும். தினமும் இரவு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசாக 6 ஆயிரம் ரூபாய், 3ம் பரிசாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குலுக்கலில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகையை வழங்குவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம் , மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!