மகாகவி பாரதியாரின். 141 வது பிறந்தநாள் விழா. பாரதி விழாவாக. அரியமங்கலம் லட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி. மற்றும் தமுஎகச காட்டூர் கிளையின் சார்பாக. விழா டிசம்பர்12 அன்று நடந்தது. பாரதி வேடமிட்ட மழலை குழந்தைகளின். பாரதி பற்றிய பாட்டும் பேச்சும். உள்ளத்தை கொள்ளை கொண்டது.
தமுஎகச காட்டூர் கிளைச் செயலர் பத்மநாபன் தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட மைய நூலாக வாசகர் வட்ட தலைவர் திரு. வீ. கோவிந்த சாமி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர் இரா. விஜயலட்சுமி பாரதி கண்ட கனவு பலித்ததா எனும் தலைப்பில் உரையாற்றினார். மாணவி ஸ்ரீமதி பாரதி கவிதைகள் குறித்துப் பேசினார். மாணவர்கள் வை. தனலட்சுமி, எஸ். ஆதி, காசிஃபா, சதீஷ்குமார் பாரதியின் பெருமைகளை பேசினர்.
பாரதி வேடமணிந்த குழந்தைகள் பாரதி பாடல்கள் பாடினார்கள். பாரதி குறித்துப் பேசினார்கள்.
குழந்தைகள் வரைந்த பாரதி ஓவியம் கண் காட்சியில் வைக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சிறப்பு விருந்தினார்கள் / நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
தமுஎகச காட்டூர் கிளையின் நிர்வாகிகள் நந்தா, ரவிச்சந்திரன் & கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர். பள்ளி நிர்வாகிகள் சுமதி & தாமரைச் செல்வி நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
ஆசிரியர் லா.ஜாக்லின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் வை.தனலட்சுமியின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
நவீன் லக்ஷ்மன், அருண்குமார் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் 'தீட்டு" சிங்கிள் டிராக் ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளது. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தீட்டு...
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி "வா தமிழா வா". மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.