தமிழகம்

அரசு பள்ளி மாணாக்கருக்கு பசுமை காவலர் விருது

143views
 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் 20 பேருக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடந்தது. தேசிய  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, அனைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு தொடர்ந்து பராமரித்து வரும் மாணவர் 20 பேருக்கு தர்மபுரி பசுமை அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட பசுமை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.
பசுமை ஆசிரியர் காளிதாஸ் ஒருங்கிணைப்பில் ஆசிரியைகள் யாஸ்மின், ஹில்டா காணிக்கை ராணி, மீனாம்பிகை, நஜ்முநிஷா, தனலட்சுமி, கங்கா, ஆய்வக உதவியாளர் வெங்கடேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!