தமிழகம்

கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு ராமநாதபுரம் எஸ்பி பாராட்டு

164views
ஆர்.எஸ்.மங்கலம் அருகே இரு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே விரதன்வயல், ஆனந்துார் ஆகிய கிராமங்களில்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் தலைமையில் திருவாடானை குற்றப் பிரிவு போலீசார் தனிப்படையினராக நியமிக்கப்பட்டனர். குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பரமக்குடி பொன்னையாபுரம் பாண்டி மகன் தங்கராஜ் 33, கருமலையான் மகன் செல்லமுத்து 24 ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 பவுன் நகை கைப்பற்றினர்.
நயினார்கோவில் அருகே மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகள் ரோஜா வீட்டு இரும்பு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, வெள்ளி கொலுசு கடந்த 14 ஆம் தேதி திருடு போனது. இது தொடர்பாக, நயினார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், மும்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு கைப்பற்றினர்.
இவ்விரு வழக்குகளில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த ஆர்எஸ் மங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் திருவாடானை குற்றப்பிரிவு, நயினார்கோயில் போலீசாரை எஸ்பி தங்கதுரை பாராட்டினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!