தமிழகம்

உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து வரும் தண்ணீரால் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் போக்குவரத்து பாதிப்பு.வாகன ஓட்டிகள் அவதி.

61views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அணைப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய் செல்கின்றது.இதில் வத்தலகுண்டு சாலை 4வது வார்டு எஸ்ஓஆர் நகர் பகுதியில் குழாய் உடைந்து இரு மாதமாகியுள்ளது. இதனால் உடைந்த குழாய் மூலம் வெளிவரும் தண்ணீரால் சாலையில் தண்ணீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் குண்டு குழியுமான சாலையை கடக்க முயலும் போது கீழே விழும் நிலை நிலை ஏற்பட்டுள்ளது.இரவு நேரங்களில் இருட்டில் சாலை சரிவர தெரியாததால் தினமும் சிலர் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் நெடுஞ்சாலைத்துறையிலும் தகவல் தெரிவித்;தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியினால் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!