தமிழகம்

வேலூரில் லோடு லாரி மீது பைக் மோதல் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

95views
வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (26) சிசிடிவி பொருத்தும் பணி செய்துவந்தார். இதே பகுதியை சேர்ந்த நண்பர் ராகுல்ராஜா (25) சென்னையில் கேட்டரிங் தொழில் செய்துவருகின்றார். 2 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே பைக்கில் அடுக்கம்பாறை பகுதிக்கு சென்றுகொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து நாமக்கல்லை நோக்கி சென்ற சிமெண்ட் லோடு லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாரதவிதமாக பைக்லாரியின் பின்பகுதியில் மோதியதில் 2 பேரும் நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!