சீனாவில் மலைப் பாதைகள் வழியாக மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட வீரர்கள், திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்ததில் சிக்கிப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மலை பாதைகள் வழியாக 20 முதல் 31 கிலோ மீட்டர் இடைவெளியில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. மதிய வேளையில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியின் போது கால நிலையில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஆலங்கட்டி மழை பொழிந்ததுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது.
இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கிய 20 வீரர்கள் சம்ப இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், ஒரு வீரரைக் காணவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 18 வீரர்கள் இந்த இயற்கை சீற்றத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு குழு அறிவித்துள்ளது.