உலகம்

துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு ஜூஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

25views
துபாய் :
அமீரக தொழிலாளர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும், அரசின் அங்கீகாரம் பெற்ற சமூக சேவை அமைப்பான கிரீன் குளோப் சார்பில் உழைப்பாளர் தாகம் தணிக்கும் மனிதநேய நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி துபாய் டைம் ஸ்குயர் பகுதியில் உள்ள நிறுவனத்தின் கட்டுமான தளத்தில் நடைபெற்றது.  கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 1500 தொழிலாளர்களுக்கு தண்ணீர், பழங்கள், லபான்,பிஸ்கட், நட்ஸ், கிராசியன்ட் உள்ளிட்ட சிற்றுண்டி தொகுப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்வினை கிரீன் குளோப் உறுப்பினர்கள் அபூபக்கர், ரசூல்,பீர் முஹம்மது, சபீர், ஜிப்ரில் மற்றும் தன்னார்வளர்கள் ஒருங்கிணைத்தனர். இறுதியில் இந்நிகழ்ச்சி சிறக்க ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!