இந்தியா

இந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

132views

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (பிப்.,12) 11,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று, 12,143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,08,92, 746 ஆக அதிகரித்தது. 103 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,55,550 ஆக உள்ளது. 11,395 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக உள்ளது.

இந்தியாவில், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.32 சதவீதமாகவும், இறந்தவர்களின் விகிதம் 1.43 சதவீதமாக உள்ளது.

தற்போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 1,36,571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பாதிக்கப்பட்டோரில், 1.25 சதவீதம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!