தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு பங்கேற்பு

107views
வேலூர் வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு கலந்துகொண்டார். பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பாமல், நிரந்தரமாக நியமிக்க வேண்டும், மத்திய அரசு 8-வது ஊதியக்குழு அமைத்து அதன் பலன்களைஜனவரி 1-ம் தேதி வழங்க உள்ளது, அதேப்போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும், அதேப்போல் அகவிலைப்படியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் மணி, துணைத்தலைவர் ஜெயப்பால்,அமைப்பு செயல் தலைவர் மதன்குமார், மற்றும் நிர்வாகிகள் தாண்டவ மூர்த்தி, முனுசாமி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!