தமிழகம்

சோழவந்தானில் நேரு யுவகேந்திரா துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது

48views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேரு யுவகேந்திரா நீரத்தான் துர்க்கை மகளிர் மன்றம் இணைந்து நடத்திய கிராம மற்றும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ,கோகோ, கபடி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் சிவபாலன் துவக்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார் ஸ்ரீ அன்னை கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி முன்னிலை வகித்தார்.
துர்க்கை மகளிர் மன்ற தலைவி நாகலட்சுமி வரவேற்றார். ஸ்ரீ அன்னை நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி, முதுகலை ஆசிரியர் ராமமூர்த்தி, சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தமிழ் துறை தலைவர் பெரியசாமி பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் மாயக்கண்ணன், பெருமாள் ,ஆனந்த், ஜெயக்குமார், முத்துப்பாண்டி போட்டிகளை நடத்தினர். வசந்த் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!