தமிழகம்

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

60views
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக திமுக அமைப்பாளர்கள் அணி அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம்சோழவந்தானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் பெரியகருப்பன் ராஜா, நீலமேகம், பேரூர் துணைச் செயலாளர்கள் கொத்தாளம் செந்தில், ஸ்டாலின், செல்வராணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் நிஷா கௌதம ராஜா, முத்துச்செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், முன்னாள் துணைச் சேர்மன் அண்ணாதுரை, மில்லர், தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் சங்ககோட்டை சந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!