தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் நீருற்றுகளால் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

257views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை காலமான தற்போது பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள அருவிகள், ஓடைகளில் தண்ணீர்வரத்து இருந்து வருகிறது.
குறிப்பாக திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் யானைப்பள்ளம், மீன்வெட்டி அருவி, பேச்சியம்மன் கோவில், ராஜபாளையம் அய்யனார் கோவில் அருவி, வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக, புதியதாக திடீர் நீருற்றுகள் ஏற்பட்டு மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் தண்ணீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நீர் வரத்தினால் திருவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில், இந்த ஆண்டு விவசாயப் பணிகள் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!