தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் இந்து மகாசபா சார்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி கண்டன ஆர்பாட்.டம். 12 பெண்கள் உள்பட 60 பேர் ஆர்பாட்டத்தில் கண்டன கலந்துகொண்டனர்.

84views
மதுரை மாவட்டம் தாலுகா திருப்பரங் குன்றம் மலை மீது மோட்ச விளக்கு போடும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்படுகிறது.  மலைமேல் உள்ள குதிரை சுனை கார்த்திகை தீப தூணில் ஏற்ற கோரி 16 கால் மண்டத்தில் இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்பாட்ட நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.  மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கூறுகையில் கார்த்திகை தீபத்தை மலையில் உள்ள மோட்ச தீபம் ஏற்றுமிடத்தில் பல ஆண்டுகளாக ஏற்று கின்றனர். ஆகம விதிப்படி மலை உச்சி குதிரை சுனை திட்டு கார்த்திகை தீப துணில் ஏற்ற அரசும் அறநிலையதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.  12 பெண்கள் உள்பட 60 பேர் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம்., மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!