தமிழகம்

சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார்

45views
ஆண்டிபட்டி வெங்கடாஜலபுரம் அருகே சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார்.
சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த சிறுவனின் மறுவாழ்வு மற்றும் படிப்புக்காக 1098 எண்ணில் தொடர்பு கொண்டு ஆண்டிபட்டி காவல்துறையினர் உதவியுடன் தற்போது சிறுவன் குழந்தைகள் அன்பு இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதரவற்ற சிறுவனின் மறுவாழ்வுக்கு வழி காட்டிய மருந்தாளுநர் ரஞ்சித்குமாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!