109views
குடும்ப சொத்து விபரங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பிரச்சனைகளை, முறையாக எதிர்கொள்வதற்கென பல்வேறு சட்ட வழிமுறைகள் உள்ளன. அச்சமயங்களில் சட்டப்படியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது உரிமைகளை கேட்டு பெற்றிட வேண்டும்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது சிவகங்கை மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக வட்டார அளவிலும், ஊராட்சி அளவிலும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், கோலபோட்டி, கருத்தரங்கம் நடத்துதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வீடியோப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டு, சர்வதேச மனித ஒற்றுமை தினமான 20.12.2022 அன்று நிறைவு பெற உள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரங்களை மாவட்ட முழுவதும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து சட்ட வழிமுறைகள் குறித்த கையேடுகளை துறைகள் ரீதியாக ஒருங்கிணைத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது கைபேசி இணைப்பில் வாட்ஸ் ஆப் வாயிலாக பகிர்ந்தளித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தங்களது கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
You Might Also Like
திருவண்ணாமலை வைகாசி பெளர்ணமி உண்டியல் காணிக்கை ரூ. 34 லட்சம்
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3,47,82.527, தங்கம்112கிராம், வெள்ளி 1, 919 கிலோ, கிடைத்து உள்ளதாக கோவில் நிர்வாகம்...
வேலூரில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம்!! பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை!!
வேலூர் மாவட்டம், வேலூரில், தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு...
துபாயில் நடந்த விழாவில் கீழக்கரை இளைஞருக்கு விருது
துபாய் : துபாயில் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சியின் 16வது கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர்...
துபாயில் தமிழக பேராசிரியருக்கு விருது
துபாயில் நடந்த கருத்தரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கர்டின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் சித்திரை பொன்செல்வனுக்கு 'தொலைநோக்கு பார்வை கொண்ட...
வேலூர் ஆகாஷ் எஜிகேஷனல் சர்வீஸில் மூன்று மாணவர்கள் நீட் யுஜி-ல் சாதனை!!
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஆகாஷ் எஜுகேஷனல் அலுவலகம், வேலூரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்...