தமிழகம்

நாகமலை புதுக்கோட்டை அரசு பள்ளியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

455views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் செயல்படும் அரசு பள்ளியில்., திருப்பரங்குன்றம் ஊரகவளர்ச்சிதுறை மகளிர் சுய உதவி குழு சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

நாகமலை புதுக்கோட்டை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி முன்னிலையில் நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு பள்ளி மாணவ., மாணவியர்களுக்கு சத்தான உணவு என்றால் தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தான் என்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை வரவேற்று நன்றி வரை வழங்கியவர் அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை செந்தில்குமாரி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!