98views
ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த வழக்கில் இன்று(மார்ச் 16) முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்ய ராணுவம், உக்ரைன் மீது கடந்த 15 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யா மீதான உக்ரைன் குற்றச்சாட்டு குறித்து இன்று சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.