”தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும்” என்று பா.ஜ. முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்துதான் ருத்ரதாண்டவம் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு சிலர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லுாரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா.கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
121views
You Might Also Like
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த விருதம்பட்டியில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை திறந்துவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டில் நம்ம காட்பாடி செல்பி பாயிண்ட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்...
வேலூரில் மீண்டும் சதம்
வேலூரில் இன்று வியாழக்கிழமை 100.9 டிகிரி வெய்யில் வாட்டியது.நேற்று முன்தினம் வேலூரில் 100.1 டிகிரி வெய்யில் பதிவானது. இதன் காரணமாக பகலில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கே.எம். வாரியார்...
வேலூர் அடுத்த புது வசூரில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா
வேலூர் அடுத்த புது வசூர் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை அளிக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட சமூகநல அலுவலர் உமா,...




