உலகம்உலகம்செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. அரசு வெளியிட்ட அறிவிப்பு.!!

56views

பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் இதுவரை கொரோனா வைரசால் 354,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசால் 6,096 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 309,732 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று சென்று உயர தொடங்கியதை அடுத்து, இன்று இரவு முதல் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை எந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை மக்கள் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!