தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டொலைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.8 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாளிலேயே திடீரென குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு இயக்கப்படாததே இதற்கு காரணம் என்றும், பழுதை சரி செய்யும் பணியில் ஸ்டொலைட் ஆலையின் தொழில்நுட்ப வல்லுநா் குழுவினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்டொலைட் தொழில்நுட்ப குழுவினருடன் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சோந்த தொழிநுட்ப குழுவினரும் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் சனிக்கிழமை முதல் இஸ்ரோ குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குளிா்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் முதல் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
171views
You Might Also Like
கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு அன்னை தெரசா விருது
அன்பு, கருணை, மனிதநேயம் – வாழ்வின் உண்மையான செல்வம் இவ்வுலகிற்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; இவ்வுலகை விட்டு செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை....
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக 38 – ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற செல்விக்கு பணிநிறைவு பாராட்டு விழா
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம்சத்துவாச்சாரியில் கடந்த 38 - ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து இம்மாதத்துடன் ஓய்வுபெற்றவர் விருதம்பட்டு ஜி.செல்வி. பணி நிறைவு பாராட்டு விழா செல்விக்கு,...
குடியாத்தத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் அறந்தாங்கி,அரசு...
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச் சொற்பொழிவு 28/7/2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான தமிழ்...




