தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் தொடங்கியது. முதற்கட்டமாக 4. 82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், ஸ்டெர்லை ஆலை தாமாகவே முன்வந்து, ஆக்சிஜன் தயாரிப்பதாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கே ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற உறுதியோடு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்.
இதையைடுத்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான வேலைகள் நடந்து வந்தன. நேற்று இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது 4.82 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
டேங்கர் லாரிகளில் சென்ற ஆக்சிஜனை கொடி அசைத்து தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அனுப்பி வைத்தார். இந்த திரவ ஆக்சிஜன் 98 சதவிகிதம் சுத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இனிவரும் நாட்களில் தினமும் 35 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை என்று கூறப்படுகிறது.
183views
You Might Also Like
கிரீன் குளோப் நிறுவனரும் தலைவருமான திருமதி ஜாஸ்மின் அபூபக்கர் அவர்களுக்கு அன்னை தெரசா விருது
அன்பு, கருணை, மனிதநேயம் – வாழ்வின் உண்மையான செல்வம் இவ்வுலகிற்கு நாம் எதையும் கொண்டு வரவில்லை; இவ்வுலகை விட்டு செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை....
வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக 38 – ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற செல்விக்கு பணிநிறைவு பாராட்டு விழா
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம்சத்துவாச்சாரியில் கடந்த 38 - ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து இம்மாதத்துடன் ஓய்வுபெற்றவர் விருதம்பட்டு ஜி.செல்வி. பணி நிறைவு பாராட்டு விழா செல்விக்கு,...
குடியாத்தத்தில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் அறந்தாங்கி,அரசு...
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச் சொற்பொழிவு 28/7/2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான தமிழ்...




