கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

125views
சுவாசம் கூட
தாழ்ப்பாள் இட்டே
இயற்கையை சுவைக்கிறது..
கொல்லுயிரியின் தாக்கம்
யாருமில்லா சாலையும்
கூட்டமில்லா சந்தையும்
தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும்
மனிதமும்…
ஓ!!!
வீரியம் கொண்ட எதிரியே
உன் கிரீடத்தின் அர்த்தம்
இன்றுதான் புரிந்தது..
இருந்தாலும்
ஒன்றை மட்டும் மறக்காதே
வருவான் ஓர் நாள்
உன்னையும் வீழ்த்தும்
சக்திமான்..
அதுவரை…
நின்று திணறும் சுவாசமும்
பீதியில் கதவடைப்பு நடத்துமே…!!!
  • மஞ்சுளாயுகேஷ்

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!