தமிழகம்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை – மேலும் 2 பேர் கைது

60views
வடபழனி நிதி நிறுவன கொள்ளை விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வடபழனி மன்னார் முதலிதெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேப்பிட்டல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து , ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் விருகம்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ் இக்பால் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமறைவாகிய குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கிஷோர் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னை வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தலைமுறைவாக இருந்த தினேஷ் , சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். வடபழனியில் செயல்படும் நிதி நிறுவனத்தில் ஏழு பேர் கொண்ட கும்பல் 38 லட்சத்தை கத்தி முனையில் கொள்ளையடித்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!