மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர் . பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார் .போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும் , சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.
185views
You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....