கவிதை

மகளிர் தின சிறப்பு கவிதை

197views
“பூச்சூடும் மங்கை இவள்
பூமியின் அரசி இவள்
சூரியனின் ஒளி இவள்
சுட்டெரிக்கும் தீ இவள்
அமைதியின் அன்பு இவள்
ஆட்சி செய்யும் புதுமை பெண் இவள்
குடும்பத்தின் வேர் இவள்
குறையாத செல்வமும் இவள்
புல்லாங்குழலின் இசை இவள்
புத்தகத்தை தேடி வந்து
பல சாதனைகள் புரிந்திடுவாள்
பண்பை பார்த்து பகுத்தறிவை
வளர்த்திடுவாள்
பாசக்கூட்டுக்குள்ளே பக்குவமாய்
நடந்திடுவாள்
ஆணும் ,பெண்ணும் சமம் என்று
ஆழமாய் புரியவைப்பாள்
கற்பை பாதுகாக்க
கண்ணகியாய் மாறிடுவாள்
மகளாய் பிறந்து
மருமகளாய் மறு வீடு புகுந்து
மனைவியாய் கணவன் கைபிடித்து
மழழையின் மொழியில் மகிழ்ச்சி கொண்டு
மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளே
மாவுலகம் காத்திட மாபெரும் சாதனைகள் படைத்திட
மனதார வாழ்த்துக்கள் புதுயுகம் படைக்கும்
புரட்சிப்பெண்களுக்கு…
  • ப.ஜெகதீஸ்வரி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!