சினிமா

பார்த்திபன் படத்துக்காக ஒன்றிணைந்த 3 ஆஸ்கர் வின்னர்கள்… வேற லெவலில் தயாராகும் இரவின் நிழல்

79views

“ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றிகண்டவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் மட்டுமே இயக்கி, தயாரித்து, நடித்த “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரே ஒரு ஆள் மட்டுமே நடித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு சென்று வந்தது, அதே போல்… சிறந்த படமாக தேசிய விருதையும் பெற்றது. தற்போது இயக்குனர் பார்த்திபன், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அபிஷேக் பச்சன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இதுதவிர இரவின் நிழல் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் பார்த்திபன். இப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தற்போது மேலும் இரு ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அதன்படி  இந்த படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக கட்டா லங்கோ லியான் என்பவரும், சவுண்ட் மிக்சிங்கிற்கு கிரைக் மான் என்பவரும் ஒப்பந்தமாகி இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இப்படத்தில் 3 ஆஸ்கர் வின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டணி இப்படத்துக்காக மேலும் ஒரு ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். மேலும் இரவின் நிழல் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருக்கிறார்கள்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!