கவிதை

நிழல்

284views
மரத்தடியிலமர்ந்து
நான் எழுதும் முன்பே
என் தாள்களில்
மரம் எழுதியது
ஓர் அழகிய கவிதையை
பறவைகளின் இசைக்கேற்ப
பாடுவதைப் போல்
அது அசைந்து கொண்டேயிருந்தது
ஆனால் அதன் ஓசைகளை
கிளைகள் வைத்திருந்தன
பறக்கும் பறவைகளின் நிழல்களுக்கு
என் தாள்களில் கூடுகள் கிடைக்காமல்
அலைந்துகொண்டேயிருந்தன
நிழலை வரைகிறது
வெளிச்சத் தூரிகை
அசைத்து அழிக்கிறது காற்று
வாசிக்கத் தொடங்கிவிட்டேன்
நிழலின் மொழி
அத்தனைக் குளிர்ச்சியாக இருந்தது.

  • பாரிகபிலன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!