உலகம்

தென் கொரியாவில் மீண்டும் தினசரி கரோனா புதிய உச்சம்

44views

தென் கொரியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமை முதல்முறையாக 5 ஆயிரத்தைக் கடந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,262 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இத்துடன், 4,57,612 போ கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 3,705 போ அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். அவா்களில் 47 போ கரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, தங்கள் நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா 5 பேருக்குத் தொற்றியிருப்பது முதல்முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தென் கொரிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!