உலகம்

MDS ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய மீட் & கிரீட்

105views
MDS ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய ‘இனிய நந்தவனம்’ மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம், நிமிர்ந்து நில் துணிந்து சொல் ஆகிய குறும்படம் மற்றும் மேடை நாடகத்தில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பிரைன் ஓ பிரைன் மேலாண்மை இயக்குனர் திரு ஆனந்த் சுப்ரமணியம், First Abudhabi Bank எக்சிகியூடிவ் இயக்குனர் திரு ஆனந்த் சுப்ரமணியன், ஜமால் முகம்மது கல்லூரி அமீரக பிரிவுச் செயலாளர் தின்டுக்கல் ஐமால் முகைதீன், இலங்கை இலக்கிய புரவலர் திரு ஹாசிம் உமர், முனைவர் ஸ்ரீ ரோகினி, ஆகியோருடன் நிகழச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்திய கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் MDS ஈவண்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவில் நிமிர்ந்து ‘நில் துணிந்து சொல்’ குறும்படம் திரையிடப்பட்டது.
அமீரக குறுநாடக அமைப்பாளர் திருமதி ரமாமலர், பட்டிமன்ற பேச்சாள திருமதி பாத்திமா தாஹிர், தொழிலதிபர் இளையான்குடி செய்யது அபுதாஹிர், திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரக பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
‘மகிழ்வித்து மகிழ்விப்போம்’ மற்றும் ‘நிமிர்ந்து நில் துணிந்து சொல்’ நாடகக் கலைஞர்கள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!