சினிமா

தடைகளை தாண்டி பிரம்மாண்டமாக வெளியாகும் ஜெயில் – ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா?

69views

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இவர் ஏற்கனவே வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இப்படத்தில் இசையமைப்பாளும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடித்துள்ளார். அதோடு, ராதிகா, ரவி மரியா, நந்தன் ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. எனவே, திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், தடைகளை தாண்டி இப்படம் சொன்ன தேதியில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. எதிர்பார்த்ததை விட மிக அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. திட்டமிட்டபடி ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை எம் எஸ் எம் பிலிம் டிரேடர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சார்பாக எம் செண்பகமூர்த்தி அவர்கள் வெளியிடுகிறார். இத தகவலை இப்படத்தின் முதல் பிரதி தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் உறுதி செய்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!