நிகழ்வு

குவைத்தில் ஒரு திருவையாறு – செல்வி . ப்ரீத்தா ஷிவானி ராஜாவின் கர்நாடக இசை அரங்கேற்றம் .

147views
குவைத்தை  திருவையாறு குவைத்தாக மாற்றும்படி , குவைத்தில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் ராஜா மகாலஷ்மி தம்பதியின் செல்ல புதல்வி. பிரீத்தா ஷிவானி ராஜா ( 15 ) வாய்ப்பாட்டு அரங்கேற்றம் 23-09-22 அன்று சிறப்பாக நடந்தது.
தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை . பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். டாக்டர் s .சௌமியா சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை புரிந்து அரங்கேற்றத்தில் கலந்து கொண்டார்.ஏ.என் .என். நடராஜன் – ஆனந்தி நடராஜன் ,இவர்களுடன் பிரான்ஸ் தூதரகத்தை சேர்ந்த திருமதி ஈயா பென்ஸ் மற்றும் குவைத் பல்கலைக்கழகத்தை சேர்த்த திருமதி அன்பால் அல் ஆவோதி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
திருமதி டாக்டர் சௌமியா அவர்கள் தனது பாராட்டு உரையில் ” பயம் சிறிதுமின்றி மேடையில் சக கலைஞர்களுடன் ஒன்றினைந்து தாளம் தப்பாமல் பாடிய ” ப்ரீத்தாவின் திறமையையும், அதற்கு பெற்றோரின் ஊக்குவிப்பையும் பெரிதும் பாராட்டினார்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!