காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கேடட் (17வயதுக்குட்பட்டோர்) பிரிவுக்கான பந்தயம் ஆகஸ்ட் 9-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லண்டனில் நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தவற்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் 2 நாட்கள் நடந்தது.
தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் காமன்வெல்த் வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வுபெற்று உள்ளனர். ஜாய்ஸ் அஷிதா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), ஆகியோர் பாயில் பிரிவிலும், ஜெபர்லின் (கன்னியாகுமரி) சபரே பிரிவிலும் பங்கேற்றார்கள்.
இந்த 3 பேரும் காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு வாள்வீச்சு சங்க ஆதரவுடன் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்கள். இந்த 3 பேருக்கும் செல்வகுமார் பயிற்சி அளிக்கிறார். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தை நிர்வகிக்கும் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது குழந்தைக்கு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.