சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர்: பகுதி-27

82views
அன்று இரவு தேவியின் வீட்டில் தங்கியதால் லக்ஷ்மிக்கு மன வருத்தம்.
தன் மகன் அவனுடைய குழந்தை வந்ததிலிருந்து மாறிவிட்டதாக நினைக்கிறாள்.
அவனிடம் அந்த கோபத்தை காட்டி விடக்கூடாது.
இதை பொறுமையாக கையாள வேண்டும் என்று யோசிக்கிறாள்.
இப்படியே ஒரு மாதம் நகர்ந்து கொண்டிருக்க…….
அரசு பணிக்காக தேர்வு நடப்பதற்கு அறிவிப்பு வெளியாகிறது.
அதில் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என செய்தி செழியனின் காதுக்கு எட்ட செழியனும் போய் விண்ணப்பித்து விட்டு வந்தான்.
குழந்தையை பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தன் தாயிடம் சொல்லி மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வருமாறு கேட்கிறான்.
லட்சுமியும் செழியன் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாமல் அன்றே தேவியின் வீட்டிற்கு சென்று இருவரையும் அழைத்து வருகிறார்கள்.
கடைக்கு சென்று வந்ததும் வீட்டில் அவனது குழந்தையையும், மனைவியையும் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகிறான்.
கவிதாவும் வேலைக்கு செல்வதை விட்டு விட்டு வீட்டிலேயே இருக்கிறாள்.
தேவியை பார்த்த செழியன் “நீங்க இருவரும் வந்த பின்புதான் “வீடு வீடாக” இருக்கிறது. இவ்வளவு நாளாக எனக்கு வெறுமையாக இருந்தது. “என்று கூற…..
“அப்படி இருந்தே தான் நீங்கள் என்னிடம் பேசாமல் இருந்தீர்களா??? கோவத்தில் நான் அப்படி இருந்தேன்.
நீயாவது என்னிடம் வந்து பேசி இருக்கலாம் இல்லையா…நீங்கள் எத்தனை நாட்கள்தான் இப்படி என்னிடம் பேசாமல் இருக்கிறீர்கள் என்று பார்த்தேன்.”
“பரவாயில்லை உங்களுடைய குழந்தை வந்ததும் அதற்காவது என்னிடம் பேசினீர்களே!”
“ஆமாம்! எப்படி பேசாமல் இருப்பது? என் உயிரையே எனக்கு கொடுத்தவள் நீ. சரி அதெல்லாம் போகட்டும் இந்த பேச்சை விடு. உறங்க நேரமாகிறது. குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு படு. மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை போட்டுவிட்டு உறங்கு “என்று கூறிவிட்டு அவனும் தூக்கத்திற்கு செல்கிறான்.
தேவியிடம் அதிகாலை நீ என்னை எழுப்பி விடு எனக்கு ஒரு தேர்வு இருக்கிறது அதற்காக நான் கிளம்ப வேண்டும். அதனால் காலையில் எனக்கு ஏதும் உணவு சேர்த்து சமைக்காதே… வீடு திரும்ப இரவு ஆகிவிடும்.
ஏன்? அவ்வளவு தூரமா???
இல்லை கொஞ்சம் வேலைகள் இருக்கு அதை அப்படியே முடித்துவிட்டு வருவேன். என்று கூறிவிட்டு உறங்கச் செல்கிறான்.
மீண்டும் சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!