இந்தியா

இந்தியாவிற்கு வருகை புரிந்த வங்காள தேச பிரதமர்

72views
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
அவருக்கு, டெல்லியில் இந்திய நாட்டின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, இந்தியாவின் பிரதமரான மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார்.
அந்த சந்திப்பின் பொது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மென்மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் தெரிவிக்கையில், வங்காளதேசம் தனது இலக்குகளை அடைவதற்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என தங்கள் நாடு நம்புவதாக தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2019ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார் என்பது நினைவிற்கு கொண்டுவருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!