தமிழகம்

சிவகாசி அருகே முன்னாள் அமைச்சர் வீட்டில், முன்னாள் அமைச்சர் சந்திப்பு

44views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசித்து வருகிறார். முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு, மற்றொரு முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். வரும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணம் நடைபெறுகிறது. மேலும் அதே நாளில் 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக ஆர்.பி.உதயகுமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அழைப்பிதழை பெற்றுக் கொண்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி, உதயகுமாரின் மகளுக்கு வாழ்த்துகள் கூறி ஆசி வழங்கினார். மேலும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கும், ஆர்.பி.உதயகுமார் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!