தமிழகம்

சிவகாசிக்கு குடிநீர் கொண்டு வரும் குழாயில் கசிவு, வீணாகும் குடிநீர்

118views
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு வெம்பக்கோட்டை அணையிலிருந்தும், திருநெல்வேலி மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வெம்பக்கோட்டை அருகேயுள்ள குண்டாயிருப்பு, பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள குடிநீர் செல்லும் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்ணீர் குழாய் கசிவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!