தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் – ன் நினைவு தினத்தை ஒட்டி , அவரது திருஉருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

59views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி விஸ்வநாததாஸின், நினைவு இல்லம் முன்னாள் முதல்வர். கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .  இந்நிலையில் தியாகி விஸ்வநாததாஸ் -ன் நினைவு தினத்தை ஒட்டி, தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினவேல், கோட்டாட்சியர் சௌந்தர்யா , தாசில்தார் சிவராம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் , நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .  இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தியாகியின் வரலாற்று புகைப்படங்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!