தமிழகம்

வேலூர் அடுத்த பள்ளிகுப்பம் கீழ் மோட்டூரில் தேவி கருமாரி அம்மன் ஆலைய கும்பாபிஷேகம்

83views
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிகுப்பம் கீழ் மோட்டூர் கரிகிரி சாலையில் உள்ள ஸ்ரீதேவிகருமாரியம்மன் ஆலைய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி பூஜை, கோ – பூஜை, 2-ம் கால யாகபூஜை , யாத்வதானம், பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. பின் அன்னதானம், கரகம், கூழ் வார்த்தல் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் வேலூர் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி. ராமு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.குமார், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், 2-வது மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன், நாட்டாமை நடராஜன், மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை சாமியார் மு. ஏழுமலை செய்து இருந்தார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!