தமிழகம்

வேலூர் எஸ்பி அதிரடி – காட்பாடி அருகே அதிமுக பிரமுகரை கத்தியால் குத்திய ரவுடிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த லத்தேரி காவல் நிலைய காவலர்கள் கூண்டோடு மாற்றம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பு

95views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரிபகுதியை சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி பாபு,இவர் தனது நண்பருடன்அங்குள்ள சந்தை பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார் அப்போது 4 பேர் கொண்ட கும்பல்மது போதையில் சாலையில் செல்லும் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.இது குறித்து பாபு அவர்களை தட்டிக் கேட்டபோது கத்தியால் குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது இதில் அவரது நண்பர் ஒருவரும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது ஆனால் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் காவல்துறையினர் ரவுடிகளுடன் இணைந்து கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை தப்பி செல்ல உதவியதாக கூறப்படுகிறது.  சம்பத் அன்று மறுநாள் லத்தேரியில் பொதுமக்கள் கடை அடைப்பு நடத்தினர் ஆனாலும் போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் நிலைமை சீராக இல்லை ,பிறகு 2பேரு கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகள் 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
லத்தேரி பகுதியில் ரவுடிகளுடன் காவல் துறையினர் கூட்டு சேர்ந்து கொண்டு கட்டிங் பார்த்துக் கொண்டிருந்தனர் இந்த சம்பவத்தை அடுத்து வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் அதிரடியாக நடவடிக்கை எடுத்தார்அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வேலூர் சரக டிஐஜி முத்துசாமியின் உத்தரவின் அடிப்படையில் லத்தேரி காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் இது தவிர அங்கு உதவி ஆய்வாளராக இருந்த ரங்கநாதன்,சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் முதல் நிலை காவலர் வினோத் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றனர் லத்தேரி காவல் நிலைய ஏட்டுக்கள் சந்திரசேகரன் தட்சிணாமூர்த்தி முதல்நிலை காவலர் புகழேந்தி லோகேஸ்வரன் ஆகியோர் காட்பாடி காவல் நிலையத்திற்கும் தீர்த்தகிரி காட்பாடி போக்குவரத்துக் காவல் நிலையத்திற்கும் சந்தோஷ் மேல்பட்டிக்கும்,காவலர் சந்திரன் காட்பாடிக்கும் ராஜேந்திரன் மேல் பட்டிக்கும் இடமாறுதல் செய்யப்படுகிறார்கள் அதன்படி கூண்டோடு காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு இவர்களுக்கு பதிலாக புதிய காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் அதன்படி விரிஞ்சிபுரம் உதவி ஆய்வாளர் குமரன் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு சரஸ்வதி ஏட்டுக்கள்கார்த்திகேயன் ராமமூர்த்தி காவலர் பிரேம்குமார் வெங்கடேசன் ஆகியோர் லத்தேரி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணவாளன் எஸ் பி அலுவலகத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருமணம் காவல் நிலைய தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் லத்தேரி காவல் நிலையத்திற்கும் விரிஞ்சிபுரம் காவலர் லோகேஷ் திருவலம் காவல் நிலையத்திற்கு தனி பிரிவு காவலராக நியமிக்கப்பட்டுள்ளனர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து காவலர்களும் உடனடியாக புதிய பணியிடங்களுக்கு பணிகள் சேர வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.
இதில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏற்கனவே காவல் ஆய்வாளராக இருந்த விஸ்வநாதன் வாணியம்பாடியில் ரௌடிகளுடன் சேர்ந்து கொட்டம் அடித்த காரணத்தினால் லத்தேரிக்கு மாற்றம் செய்யப்பட்டார் இந்த நிலையிலும் லத்தேறி வந்த விஸ்வநாதன் இங்குள்ள ரவுடிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு உள்ளார்.விஸ்வநாதன் மீது லத்தேரியை பகுதி வியாபாரிகள் பல புகார்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்காமல் ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து இருந்த காரணத்தினால் காத்திருப்போர் பட்டியலுக்கு விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஒரே காவல்நிலையத்தில் 12 காவலர்களை எஸ்.பி.ராஜேஷ்கண்ணன் மாற்றி அதிரடி செ|ய்து உள்ளார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!