தமிழகம்

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

48views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் சில்க் மில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.  வடக்கு மண்டல தலைவர் மு. ராஜமாணிக்கம்தலைமை தாங்கினார் தமிழ்நாடு நாயுடு சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சடகோபர் ராமானுஜம் முன்னிலை வகித்தார்.வேலூர் மாவட்ட யாதவ மகாசபை தலைவர் லோகு யாதவ் வரவேற்றார்.

கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி சிறப்புரை ஆற்றினார்.  மாநில நாயுடுகள் மகாஜன சங்கம் தலைவர் குணசேகரன் மத்திய மண்டல செயலாளர் சரவண தேவா வேலூர் நாயுடு சங்க தலைவர் 7ஜி முரளிதரன் நாடார் சங்கம் ஸ்ரீநாத் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கல்வி குழு சேர்ந்த பார்த்திபன்,நான் இது சங்க இளைஞர் அணியை சேர்ந்த ஜெகதீசன் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.  முடிவில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!