தமிழகம்

வேலூரில் முதலியார் கமிட்டி நிர்வாகி ரூ 5 கோடி சீட்டு பணம் மோசடி : குடும்பத்துடன் தலைமறைவு

443views
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர பகுதியான சத்துவாச்சாரி பெரிய தெருவில் வசித்து வருபவன் மோகன். இவன் செங்குந்தர் முதலியார் சமுதாய கமிட்டி இணை செயலாளராக உள்ளான்.  மோகனிடம் சத்துவாச்சாரி மற்றும் வேலூர் பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி உள்ளனர்.  ஆனால் மோகன் திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் சத்துவாச்சாரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். சுமார் 5 கோடி ரூபாய் பணத்துடன் குடும்பத்துடன் தலைமறைவானது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!