தமிழகம்

வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : செ.கு.தமிழரசன் பங்கேற்பு

62views
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய குடியரசு கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுசிவில் சட்டத்தை அமுல்படுத்தகூடாது, ஜாதிய ஆவணகொலையை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும், வன்கொடுமை சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  வேலூர் மாவட்ட தலைவர் தலித் குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் அசோக் குமார் வரவேற்றார்.

கட்சியின் மாநில தலைவர் டாக்டர் செ.கு.தமிழரசன் சிறப்புரையாற்றினார்.  நிர்வாகிகள் வெங்கடேசன், சக்திவேல், மங்கா பிள்ளை, கெளரிசங்கர், ராமஜெயம், ஏகாம்பரம், மலையராஜன், தன்ராஜ், தயாளன், ராஜாராம், தியாகு ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கே.வி.குப்பம் ஒன்றியதலைவர்ராஜ்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!